பெரம்பலூர் அருகே சாலை ஓரத்திலேயே இறந்தவரின் உடலை தகனம் செய்யும் அவலம்! - தமிழக குரல் - பெரம்பலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 22 December 2022

பெரம்பலூர் அருகே சாலை ஓரத்திலேயே இறந்தவரின் உடலை தகனம் செய்யும் அவலம்!


பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் உள்ளது ஆய்க்குடி கிராமம். ஆய்க்குடி - அசூர் செல்லும் சாலையின் மேற்குப் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் சாலையின் மறுபுறமான கிழக்குப் பகுதியின் சில இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. 

இதே பகுதியில் ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தும் இடுகாடும் உள்ளது. தண்ணீர் தேங்கியுள்ளதால் நேற்று முன்தினம் இறந்த ஒருவரது உடலை சாலை ஓரத்திலேயே தகனம் செய்தனர். மழைக்காலங்களிலும் இந்த இடுகாட்டைப் பயன்படுத்தும் வகையில் உயரத்தை அதிகப்படுத்தி சீரமைத்துத் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பெரம்பலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் ஆஸ்கர் மணிவண்ணன்.

No comments:

Post a Comment

Post Top Ad