பெரம்பலூர் அருகே பொங்கலுக்கு அச்சுவெல்லம் தயாரிப்பு பணி தீவிரம். - தமிழக குரல் - பெரம்பலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 5 January 2023

பெரம்பலூர் அருகே பொங்கலுக்கு அச்சுவெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்.


பொங்கல் பண்டிகைக்காக காடூர் கிராமத்தில் அச்சுவெல்லம் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரையும் மும்முரமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக, கரும்பு உற்பத்தியில் சிறந்து விளங்கு வது பெரம்பலூர் மாவட்டம்தான். பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 18 ஆயிரம் ஏக்கர் முதல் 23 ஆயிரம் ஏக்கர்வரை கரும்பு பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. 

இவற்றை நம்பியே எறையூரில் பொதுத்துறை சர்க்கரை ஆலையும், உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலையும் இயங்கி வருகின்றன.இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் தலா 30 கிலோ எடை கொண்ட சிப்பமாக பேக் கிங் செய்து, நாமக்கல் மா வட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிகல்பாளையம் விவசாய விற்பனைச் சந்தைக்கும், பழனி அருகே நெய்க்காரப்பட்டி சந்தைக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இவைத் தவிர பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்க ளிலுள்ள பிரபலமான மளிகை கடைகளுக்கும் சில்ல றையாக விற்பனை செய்கின்றனர். 


ரசாயணப் பொருட்களைக் கலந்து தயாரிக்கும் சர்க்க ரையைவிட, அதிகக் கெடு தல்இல்லாத வெல்லத்தின் அருமை இப்போது மக்களுக்கே புரிந்துவரும் சூழலில், இதுபோன்ற தரமான வெல்லத்தை அரசே கொள்முதல் செய்து, ரேசன் கடை, கூட்டுறவு அமராவதி விற்பனை அங்காடிகளில் விற்பனை செய்தால், பொதுமக்கள் முழுமையாகப் பயன் பெறமுடியும்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஆஸ்கர் மணிவண்ணன்.

No comments:

Post a Comment

Post Top Ad